நேற்று சென்னையில் காதலிக்க மறுத்ததாக பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது, பெண் மருத்துவமனையில் அனுமதி என்ற நியூஸ் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் ஒரு தலைக் காதலாம், பெண்ணிற்கு அந்தக் காதலில் விருப்பமில்லை. பையன் மட்டுமே ஒருதலையாக அந்தப் பெண்ணை காதலித்து வந்துள்ளான். அதனை ஏற்க மறுத்ததால் இவ்வாறு செய்திருக்கிறான். இவர்கள் காதல் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? காதல் என்பது இருவருக்குமான விருப்பம். கட்டாயம் என்பது காதலல்ல. ஒரு பண்பட்ட சமூகம் காதலை வெளிப்படுத்த எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ அதே அளவு அந்தக் காதலை மறுப்பதற்கும் சுதந்திரமுள்ளது. இதனை இளைய சமுதாயம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தன்னை காதலிக்க வற்புறுத்துகிறார் என, அந்த ஆணை அப் பெண் கத்தியால் எங்கேயாவது குத்தியது என்ற நியூஸ் வருகிறதா? பிறகு பெரும்பாலும் ஆண்கள் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும். காதல் பற்றிய பேச்சுக்கள் குடும்பத்தில் ஆரம்பித்து சமூகம் வரை பேசப் பட வேண்டும். பண்டைய தமிழ் இலக்கியங்கள் காதலை அப்படித்தான் அணுகியது. இடையில் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் தனது நரித்தனைத்தை சாதிய வர்ணமாக பு...
விஜய் ஆண்டனி மகளின் மறைவும் மீடியாக்களின் அருவருப்பும் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மறைந்ததையொட்டி சமூக வலைத்தளங்களிலும் சரி, மீடியாவிலும் சரி இஷ்டத்துக்கு அனைவரும் எழுதியும், பேசியும் வந்தனர். ஒரு கட்டத்தில் கோவமும், அருவருப்பும் அவர்களின் மீது வரும் அளவிற்கு நடந்து கொண்டார்கள். விஜய் ஆண்டனி போலவே அவரவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கும் அல்லவா, அதை அவர்கள் நினைத்துப் பார்த்தாவது பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடாதா? சிலர் பணக்கார வீடு அப்படிதான் இருக்கும், யாரும் கண்டுக்க மாட்டார்கள் என்கிறார்கள். அடித்து வளர்க்கத் தெரியாதா என்கிறார்கள். பெண்களே இப்படித்தான் என்கிறார்கள். வீட்டு வேலை, காட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்தால் மன அழுத்தம் வராது என்கிறார்கள். சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழிச்சியில் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சியோடு சம்மந்தப் படுத்தி தவறாக ஏதோ பேசி அவரை வம்புக்கு இழுத்த மீடியா பற்றிய செய்தியை மேற்கோள் காட்டி சிலர் கடவுள் அதற்கு தண்டனை கொடுத்து விட்டார் என்கிறார்கள். கடவுளுக்கு தனி மனிதர்களின் வன்மத்தை தீர்க்கும் வேலை தான் தரப் பட்டிர...
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விநாயகர் சிலைகள், ஊர்வலங்கள் அதிகரித்து இருக்கின்றன. பொதுமக்களைத் தாண்டிய சில அரசியல் இயக்கங்களின் தூண்டுதல்கள் அதிகரித்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையின் சில இடங்களில் உள்ள கடற்கரைகளில் கரைக்கப் பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கரை ஒதுங்கியது. அதோடு மட்டுமில்லாமல் கடல் நீரின் வண்ணங்களும் மாறி ரசாயனங்கள் கலந்திருந்தது. நீதி மன்றங்கள் எவ்வளவோ சொல்லியும் ரசாயனங்கள் நிறைய பூசப் பட்டிருக்கும் விநாயகர் சிலைகளால் நிகழ்ந்த சோகங்கள் இது. பக்தியை யாரும் வேண்டாம் என சொல்லப் போவதில்லை. ஆனால் தெருவுக்கு ஒரு விநாயகர் கோவில் இருக்கும் நம் நாட்டில் இத்தனை விநாயகர் சிலைகள், அதை ஒட்டிய கரைப்புகள், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாடுகள் தேவைதானா? கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை அரசுதான் அப்புறப் படுத்திக் கொண்டிருக்கிறது. எந்த பக்தி இயக்கங்களோ அல்லது சுற்றுச் சூழல் இயக்கங்களோ இதற்காக குரல் எழுப்பவோ, உதவி செய்யவோ இல்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீடிரென சிலரால் கிளப்பி விடப் படும் அசாதாரண சூழல்கள், ...
வாழ்த்துகள் தோழர்களே
ReplyDeleteThank you Thozhar
Delete